தமிழகத்தில் மின்சார தேவையை குறைத்த கனமழை ..! மின்சார துறை ஹாப்பி ..!

Published by
அகில் R

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் மின் உபயோகமானது உச்சத்தை எட்டியது. தமிழ்நாடு முழுவதும் மின் தேவை அதிகபட்சமாக 21,000 மெகா வாட்டாக அதிகரித்தது.  அதற்க்கு முக்கிய காரணம் கோடை காலத்தில் வெயில் தாக்கத்தால் நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி தான்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கோடை மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் ஏசியின் பயன்பாடானது குறைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கான தேவையும் சற்று குறைந்துள்ளது என மின்சார துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது கடந்த மே 15-ம் தேதி மாலை ஒரு 7 மணி அளவில் 17,331 மெகாவாட்டாக மின் உற்பத்தி  குறைந்துள்ளது.

அதனை தொடர்ந்து நேற்றைய நாளில் அதிகாலை பொழுதில் 13,831 மெகாவாட்டாக குறைந்தது. அதே போல நேற்று காலை 7 மணி அளவில் 14,709 மெகாவாட் அளவிற்கு சற்று கணிசமாக குறைந்துள்ளது. இதனால் 2 ஆயிரம் மெகாவாட் மின் தேவையும், ஒரு கோடி யூனிட் மின் நுகர்வும் தற்போது குறைந்துள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணாமாக அனல் மின்சார நிலையத்தின் மூலம் உற்பத்தியும் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. மேலும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின் நுகர்வானது 40 கோடி யூனிட்டை தாண்டி இருந்த நிலையில் தற்போது 1 கோடி யூனிட் குறைந்துள்ளதாகவும் மின்சாரத்துறை அதிகாரிகள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கோடை மழையின் காரணமாக தமிழக மக்களும், மின் உற்பத்தி குறைந்துள்ளதால் மின்சார துறையும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். 

Published by
அகில் R

Recent Posts

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…

1 hour ago

“இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு” – மத்திய அரசு விளக்கம்.!

டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…

2 hours ago

LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…

3 hours ago

”விஷாலுடன் ஆகஸ்டு 29 ஆம் தேதி திருமணம்” – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா.!

சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…

4 hours ago

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…

4 hours ago

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

5 hours ago