மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு நொய்யல் மற்றும் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு.
கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் கனமழை பெய்து வருவதால், குற்றாலம் நீர்வீழ்ச்சியில் மதியம் ஒரு மணிக்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அருகிலுள்ள நீர்வீழ்ச்சிகளில் மழை நீர் அதிகம் கொட்டியுள்ளது. மேலும் சின்னாறு பெரிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மாலை நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி உள்ளது.
இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் அதிக அளவில் ஆர்ப்பரித்து செல்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை நீர்மட்டமும் 97 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்து வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக பேரூர் நொய்யல் படித்துறைக்கு தண்ணீர் வந்துள்ளதால் மக்கள் மலர்தூவி வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…