நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான வழக்கை ரத்து செய்து,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக நிர்மலாதேவி குறித்து நக்கீரன் இதழில் வெளியான செய்தியில் ஆளுநரையும் இணைத்து அவதூறு பரப்பியதாகவும்,ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு,2018ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி அவர் கைதும் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் 124 பிரிவின் கீழ் கோபாலை சிறையில் அடைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவிக்கவே,அன்று மாலை அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையில் அவர் கைது செய்யப்பட்டபோது, அவரை சந்திக்க முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்தனர்.இதனால்,வைகோ அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனையடுத்து,அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, போக்குவரத்தை முடக்கியது ஆகிய பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைகோ அவர்கள் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து,இதுதொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எம்.எல்.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே,இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில்,இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் அவர்கள்,வைகோ மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…