#Breaking:”மாணவர்களே கவலை வேண்டாம்…இந்த விடைத்தாள்களும் திருத்தப்படும்” – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Published by
Edison

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வில் காலை 9 மணி அளவில் தேர்வு எழுத தொடங்கி மதியம் 12:30 மணியளவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் ஒன்றரை மணி நேரம் கூடுதலாகவும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் எதற்காக என்றால் ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைதாள்களை பதிவேற்றம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது.

மாணவர்களுக்கு ஆப்சென்ட் 

இந்த தேர்வில் வினாத்தாளை தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கும், விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்கும் ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது. அதன்படி 10,000 மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அப்சென்ட் போட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து துணைவேந்தர் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தெரிய வரும் என கூறப்பட்டது.இது மாணவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு:

இந்நிலையில்,தாமதமாக பதிவேற்றிய மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,அமைச்சர் கூறியதாவது:

“மாணவர்கள் கால தாமதமாக பதிவேற்றிய விடைத்தாள்களும்  திருத்தப்படும்.எனவே,மாணவர்கள் யாரும் கவலை அடைய வேண்டாம்.இணையதள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகி இருக்கலாம்,இதனால்,அவர்களது விடைத்தாள்களும் திருத்தப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

13 minutes ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

43 minutes ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

1 hour ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

2 hours ago

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்…வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…

3 hours ago

நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…

3 hours ago