கடந்த ஜனவரி மாதம், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசும் பொருளானது.
ஹிஜாப் அணிய தடை
மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து கர்நாடகா மாநில பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வர தடை விதித்தது. இதனையடுத்து, முஸ்லிம் மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும்
இந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 6மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது
ஹிஜாப் விவகாரம் குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இந்திய துணைக்கண்டத்தில் இருக்கக்கூடிய அரசியல் சாசன சட்டம் என்பது பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை என பல்வேறு அடிப்படை உரிமையை நமக்கு தந்துள்ளது. இவ்வாறு ஒரு தனி நபரின் உரிமையை தடுப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…