முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பாக சிலை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும்,தமிழக முதல்வருக்கு நன்றி என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த,”கர்னல் ஜான் பென்னிகுயிக்” அவர்களின் புதிய சிலையை,அவர்கள் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,பென்னிகுயிக்கிற்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பாக சிலை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும்,தமிழக முதல்வருக்கு நன்றி என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.ஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
“முல்லை பெரியார் அணையைக் கட்டிய பென்னிகுயிக்கிற்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பாக சிலை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.தமிழக காங்கிரஸ் சார்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…