குதிரை பேரம்.. இதற்கு காங்கிரஸ் இடம் கொடுக்கக் கூடாது – திருமாவளவன் பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு தேவை 113 என்ற நிலையில், 130க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், கர்நாடகாவில் மொத்தமுள்ள 224  தொகுதிகளில் காங்கிரஸ் 129 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மறுபக்கம், பாஜக 63 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

30 இடங்களில் வெற்றி பெற்றால் முதல்வராகலாம் என நினைத்திருந்த குமாரசுவாமி கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இதனால், கர்நாடகாவில் ஆட்சியமைக்க உள்ள காங்கிரஸுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து, பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர். ஹிஜாப் விவகாரம், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து போன்றவற்றால் கடந்த தேர்தலை விட 30 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. பாஜக வழக்கம்போல் குதிரை பேரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்களை செய்வார்கள்.

காங்கிரஸ் இடம் கொடுக்கக் கூடாது, கட்டுக்கோப்புடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவில் பாஜகவை மக்கள் புறக்கணித்துள்ளதால் அதிமுக தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜகவுடன் சேர்வதால் அதிமுகவிற்கு எந்த ஒரு வலிமையும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொய்வுதான் அடையும் எனவும் கூறினார். விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்த 8 தொகுதியிலும் பாஜக பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

2 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

2 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

3 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

4 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

5 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

5 hours ago