ஜெயலலிதா மறைந்தது எப்படி? விடைகிடைக்காத நிலையில் நினைவிடம் திறப்பது அவசியமா ? மு.க.ஸ்டாலின் கேள்வி

Published by
Venu

ஜெயலலிதாவின் மரணத்திற்கே இன்னும் விடை தெரியாத சூழலில், இந்த நினைவிடம் திறப்பு அவசியமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே திமுக தேர்தல் பணிக்குழுத் துணைத்தலைவர்  சிவப்பிரகாசத்தின் பேரனின் திருமண விழாவில் நேற்று மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு  நினைவிடம் திறக்கப்படுகிறது.இதை திறந்து வைப்பவர் ஊழல் விசாரணைக்கு உள்ளவர் .4 வருடமாகியும் ஜெயலலிதா ஏன் மறைந்தார் ? எப்படி மறைந்தார் ? என்று ஒரு தர்மயுத்தம் நடைபெற்றது.தர்மயுத்தம் நடந்து 48 மாதங்கள் ஆகிவிட்டது.இதன் பின் ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.விசாரணை ஆணையம் அமைத்து கிட்டத்தட்ட 42 மாதங்கள் ஆகிவிட்டது.யார் விசாரணை வேண்டும் என்று கேட்டவர் என்றால் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தான்.வேறு யாரும் கேட்க வில்லை.அவர் விசாரணை கமிஷனில் ஆஜராக வேண்டும் என்று 25 மாதம் ஆகிவிட்டது.8 முறை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.இதுவரை ஆஜராக வில்லை.இதில் ஆறுமுகசாமி கமிஷனின் காலக்கெடு 10-வது மாதமாக நீட்டிக்கப்படுகிறது.ஆனால் இதுவரை ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிவரவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கே இன்னும் விடை தெரியாத சூழலில், இந்த நினைவிடம் திறப்பு அவசியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
Venu

Recent Posts

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

31 minutes ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

55 minutes ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

1 hour ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

3 hours ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

3 hours ago