கொரோனா பரவும் சூழலில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி தர முடியும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் ராஜபாளையம், மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் 5 விநாயகர் சிலைகள் வைத்து, 50 பேர் மட்டும் பங்கேற்புடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, ஒரு நாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா பாதித்து வரும் சூழலில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி தர முடியும்? என கேள்வியெழுப்பினார்.
அதுமட்டுமின்றி, இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து உயர்நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், மனுதாரர் மனுவை திரும்பபெறவிட்டால், அதிக அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யநேரிடும் என நீதிபதி வலியுறுத்தினார்.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…