வாக்குறுதி அளிப்பதற்கு முன்பு தமிழக பட்ஜெட் விவரங்களை முக ஸ்டாலின் அறிந்து கொள்ளுமாறு அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரை செல்லூரில் கபடி வீரராகள் சிலையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுயிடம் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும் வாக்குறுதி அளிப்பதற்கு முன்பு தமிழக பட்ஜெட் விவரங்களை முக ஸ்டாலின் அறிந்து கொள்ளுமாறு விமர்சித்துள்ளார்.
முதலில் தமிழக பட்ஜெட்டில் இது செய்ய முடியுமா? எப்படி தள்ளுபடி செய்வார் என்று விவரத்தை சொல்ல சொல்லுங்கள் என்றும் வாய் புளித்தது, மாங்காய் புளித்தது என்று ஒரு அறிவிப்பை அறிவிக்க கூடாது என தெரிவித்துள்ளார். எதாவது சொல்லிட்டு போறதுக்காக ஸ்டாலின் சொல்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…