விடிய விடிய மனைவியின் அழகை ரசித்துவிட்டு, சந்தேகத்தில் 30 கிலோ கல்லை போட்டு கொன்ற கணவன் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரையில் தையல் தொழில் செய்துவரக்கூடியவர் தான் தங்கராஜ். இவரது அழகிய மனைவி தான் ருக்மணி. இவர்கள் இருவருக்கும் கடந்த 12ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகியிருந்தாலும், குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந்நிலையில், குடிப்பழக்கத்துக்கு மிகவும் அடிமையாகியும் இருந்துள்ளார். வீட்டுக்கு பணம் கொடுக்காமல் மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி தங்கராஜ் தகராறு செய்வது வழக்கம். சமைக்க கூட இவர் சரியாக பணம் கொடுக்காததால் ருக்மணி கம்பனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். ருக்மணி அழகாக இருப்பதால் தங்கராஜ் அவரை அதிகம் சந்தேகப்படுவாராம்.
அது போல ஒரு நாள் எதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தங்கராஜ் அதிகமாக பேசிக்கொண்டேயிருந்ததால் அவரை கண்டுகொள்ளாமல் ருக்மணி தூங்க சென்றுள்ளார். விடிய விடிய மனைவியை பார்த்துக்கொண்டே இருந்த தங்கராஜ் சந்தேகத்தின் உச்சிக்கு சென்றதால், 30 கிலோ எடையுள்ள கல் ஒன்றை எடுத்து அவரது மனைவி தலையில் போட்டுள்ளார். தூங்கிக்கொண்டிருந்தவரே நடந்த இந்த சம்பவத்தால் அந்த இடத்திலேயே துடித்து ருக்மணி இறந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் வந்த போலீசார் தங்கராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…