தனக்கு ஆண்மை இல்லை என்று சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையையும் ஏற்கனவே தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்மை இல்லாத நான் எப்படி பாலியல் சொந்தரவுகளில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதே காரணத்தைக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில், மகன் மற்றும் மகள் உள்ளபோது ஆண்மையற்றவர் என எப்படி கூற முடியும் என்று ஜாமீன் மனு மீதான வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பி, அவருடைய ஜாமின் மனுவை நிராகரித்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…