அதிமுகவுக்கு ஆதரவு தந்த விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆதரவு தருகிறேன் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!

Published by
Rebekal

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கையில் அதிமுகவுக்கு ஆதரவு தந்த விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆதரவு தருகிறேன் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனரும் முன்னணி நடிகர் விஜய் அவர்களின் தந்தையும் ஆகிய எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் நேற்று விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியிருந்தார். இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 1.28 கோடி மதிப்பில் 19 தெருக்களில் சாலை அமைக்கக்கூடிய பணி ஆவடி மாநகராட்சியில் நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், சாலை பணிகளை மழை காரணமாக விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார். அதன்பின் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்ற கருத்து குறித்து பேசிய அவர், ஜெயலலிதா இருக்கும் பொழுதே நடிகர் விஜய் அதிமுகவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தவர். எனவே அவரது மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை அறிவித்துள்ளதை தான் வரவேற்பதாகவும் பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

23 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago