நான் ஏன் தூத்துக்குடிக்கு சென்றேன்.? விமர்சனங்களுக்கு தமிழிசை பதில்.!

Published by
மணிகண்டன்

தென்மாவட்ட கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டன . தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி வந்திருந்தார்.

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபின்னர் பேசுகையில், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது. தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும். தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை அதையெல்லாம் சரியாக கவனித்து கொண்டு இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த பிரச்சனை வந்து இருக்காது. இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

பாண்டிச்சேரி கவர்னர் வேலையை பார்க்க சொல்லுங்க.! தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு அட்வைஸ்.!

தமிழிசையின் தூத்துக்குடி வருகையை திமுகவினர் பலர் விமரிசித்து இருந்தனர். அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், அவர் வேறு மாநில ஆளுநர் அந்த வேலையை பார்க்கவேண்டும். மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழிசை விரும்புகிறார் என விமர்சித்தார். அடுத்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், பேரிடர் குறித்து அரசை  விமர்சிக்கும் ஆளுநரை குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் என கூறியிருந்தார்.  மேலும், சபாநாயகர் அப்பாவு பேசுகையில், தமிழிசை சௌந்தரராஜன் வேறு மாநில ஆளுநர். அவர், தமிழகம் வந்து ஆய்வு செய்ய அதிகாரமில்லை என விமரிசித்து இருந்தார்.

இந்த விமர்சனங்கள் குறித்து இன்று தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தூத்துக்குடி என் சொந்த ஊர். நான் போட்டியிட்ட ஊர். அங்குள்ள கொஞ்சம் மக்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள். அனைவரும் ஆதரவளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றேன்.

அமைச்சர் சேகர்பாபு கூறுவது போல, நான் மீண்டும் போட்டியிட போகவில்லை. சபாநாயகர் அப்பாவு, இவங்க யார் இங்க வந்து ஆய்வு செய்ய என கேட்கிறார்.  நான் தூத்துக்குடி சென்றது ஆய்வு செய்ய அல்ல. நன் இரு மாநில அதிகாரத்தில் பங்கு கொண்டுள்ளேன். அங்குள்ள மக்களின்  துக்கத்தில் பங்குகொள்ள சென்றேன். நான் ஆட்சியாளர்களை குற்றம் கூற விரும்பவில்லை. ஆனால் இங்கே நிர்வாகத்தில் தவறு நடந்துள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் தன்மீதான விமர்சனங்களுக்கு பதில் கூறினார் .

 

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

3 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago