நான் ஏன் தூத்துக்குடிக்கு சென்றேன்.? விமர்சனங்களுக்கு தமிழிசை பதில்.!

Published by
மணிகண்டன்

தென்மாவட்ட கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டன . தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி வந்திருந்தார்.

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபின்னர் பேசுகையில், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது. தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும். தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை அதையெல்லாம் சரியாக கவனித்து கொண்டு இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த பிரச்சனை வந்து இருக்காது. இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

பாண்டிச்சேரி கவர்னர் வேலையை பார்க்க சொல்லுங்க.! தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு அட்வைஸ்.!

தமிழிசையின் தூத்துக்குடி வருகையை திமுகவினர் பலர் விமரிசித்து இருந்தனர். அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், அவர் வேறு மாநில ஆளுநர் அந்த வேலையை பார்க்கவேண்டும். மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழிசை விரும்புகிறார் என விமர்சித்தார். அடுத்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், பேரிடர் குறித்து அரசை  விமர்சிக்கும் ஆளுநரை குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் என கூறியிருந்தார்.  மேலும், சபாநாயகர் அப்பாவு பேசுகையில், தமிழிசை சௌந்தரராஜன் வேறு மாநில ஆளுநர். அவர், தமிழகம் வந்து ஆய்வு செய்ய அதிகாரமில்லை என விமரிசித்து இருந்தார்.

இந்த விமர்சனங்கள் குறித்து இன்று தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தூத்துக்குடி என் சொந்த ஊர். நான் போட்டியிட்ட ஊர். அங்குள்ள கொஞ்சம் மக்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள். அனைவரும் ஆதரவளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றேன்.

அமைச்சர் சேகர்பாபு கூறுவது போல, நான் மீண்டும் போட்டியிட போகவில்லை. சபாநாயகர் அப்பாவு, இவங்க யார் இங்க வந்து ஆய்வு செய்ய என கேட்கிறார்.  நான் தூத்துக்குடி சென்றது ஆய்வு செய்ய அல்ல. நன் இரு மாநில அதிகாரத்தில் பங்கு கொண்டுள்ளேன். அங்குள்ள மக்களின்  துக்கத்தில் பங்குகொள்ள சென்றேன். நான் ஆட்சியாளர்களை குற்றம் கூற விரும்பவில்லை. ஆனால் இங்கே நிர்வாகத்தில் தவறு நடந்துள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் தன்மீதான விமர்சனங்களுக்கு பதில் கூறினார் .

 

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago