போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு.
சேலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், போலீசார் அவருக்கு ரூ.200 அபராதம் விதித்துள்ளனர்.
இந்நிலையில், அபராதம் செலுத்திய நபர், அவரது நண்பரும், இந்து முன்னணியின் சூரமங்கள ஒன்றிய செயலாளருமான செல்லப்பாண்டியனிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த செல்லபாண்டியன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வசூல் செய்த பணத்தை திரும்பி தருமாறும், இல்லையென்றால் சங்கை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து,இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் வில்லியம் ஜேம்ஸ் கொடுத்த புகாரின்பேரில், செல்லப்பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…