சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
சமீப நாட்களாக, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஆனந்தனுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. தொண்டர்களுடன் மட்டுமே சசிகலா பேசுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவருடன் சசிகலா பேசியிருக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜெயலலிதா 1991-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது, ஆனந்தன் அமைச்சராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆனந்தனுடன், சசிகலா அவர்கள் கூறுகையில், கட்சி நமது கண்ணெதிரே சீர்குலைந்து போவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. எனவே தொண்டர்களுக்காக கட்சியை மீட்டெடுக்க நிச்சயம் வருவேன் என கூறியுள்ளார். ஏற்கனவே இதுபோல தொண்டர்களுடன் பேசும் வீடியோ வெளியாகி இருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் ஒருவருடன் பேசும் வீடியோ வெளியாகியிருப்பது அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…