திருச்சியில் ஒலிக்கும் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் வெற்றி முழக்கமாகட்டும் என முக ஸ்டாலின் கடிதம்.
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், மார்ச் 7ம் தேதி இலட்சியப் பிரகடனம், மார்ச் 10- வேட்பாளர் பட்டியல், மார்ச் 11- தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் மற்றும் தேர்தல் பரப்புரைப் பயணம் என பத்தாண்டுகால இருளை விரட்ட புயலெனச் செயல்படப் போகிறோம் என கூறியுள்ளார். திருச்சியில் ஒலிக்கும் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் வெற்றி முழக்கமாகட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பை நிறைவேற்றிடும் வகையில், தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் தலைப்பில் மார்ச் 7ம் தேதி திருச்சியில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அங்கு வெளியிடப்படும் இலட்சியப் பிரகடனம் ஒரு செயல் திட்ட ஆவணம் என்றும் ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றாவிட்டால் பொதுமக்கள் கேள்வி கேட்கலாம் என்ற உரிமையை வழங்க இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நான் ஏற்கனவே சொன்னதுபோல, தமிழக மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். வெற்றி நம் பக்கம் இருக்கிறது. திமுகவின் வெற்றியை எப்படியாவது தடுக்க என்பதையே இலக்காக கொண்டு செயல்படுகிறாரகள். நம் வெற்றியை தடுத்திட வேண்டும் என்ற நோக்கில் பல குறுக்கு வழிகளை கையாளுகிறார்கள். தபால் வாக்கு மீது அவநம்பிக்கை இல்லை, ஆனால் அதை கையாளும் முறையில் சந்தேகம் உள்ளது.
களம் தயார், கணைகளும் தயார், எப்படி எவ்வாறு ஏவிட வேண்டும் என்பதற்கான பயிற்சி பாசறைதான் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் சிறப்பு பொதுக்கூட்டம் என கூறியுள்ளார். உடன்பிறப்புகளின் வருகையால், களப்பணியால் அதிமுக ஆட்சி முடியட்டும், உதயசூரியனின் வெளிச்சத்தில் தமிழகம் விடியட்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் முக ஸ்டாலின்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…