சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான ஐடியாஸ்2ஐடி(Ideas2IT) என்ற நிறுவனம்,10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நிறுவனத்தில் பணிபுரியும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக அளித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக,நிறுவனத்தின் மார்கெட்டிங் தலைவர்,ஹரி சுப்ரமணியன் கூறுகையில்:”10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்குகிறோம்.எங்களிடம் 500 பணியாளர்கள் உள்ளனர். நாங்கள் பெற்ற செல்வத்தை ஊழியர்களுக்கு திருப்பித் தருவதே எங்கள் எண்ணமாக உள்ளது”,என்று கூறினார்.
மேலும்,இது தொடர்பாக பரிசு பெற்ற ஊழியர் ஒருவர் கூறுகையில்: “நிறுவனத்திடமிருந்து பரிசுகளைப் பெறுவது எப்போதுமே பெரிய விஷயம்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நிறுவனம் தங்க நாணயங்கள், ஐபோன்கள் போன்ற பரிசுகளுடன் அதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.கார் எங்களுக்கு மிகவும் பெரிய விஷயம்,” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில்,சென்னையை தளமாகக் கொண்ட சாஃப்ட்வேர் நிறுவனமான கிஸ்ஃப்ளோ நிறுவனம்,தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஐந்து நிர்வாகிகளுக்கு தலா சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 5 புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…