சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் கட்சி 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் – யுவராஜ்

Published by
பாலா கலியமூர்த்தி

சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் கட்சி 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, மருத்துவமனையில் இருந்து 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் ஒரு வாரம் ஓய்வுக்காக அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் சசிகலாவை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் கர்நாடக மாநில அமமுக செயலாளர் சம்பத் ஆகியோர் ஒன்றாக சந்திக்க சென்றதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் கூறப்பட்டது. ஆனால், சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 3ம் தேதி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அதிமுக கழக செயலாளர் யுவராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் – ஈபிஎஸ் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சசிகலாவை சந்திக்க சென்றதற்காக கர்நாடகா அதிமுக மாநில செயலாளர் பதிவில் இருந்து நீக்கப்பட்ட யுவராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து கூறுவது தவறு. சில அமைச்சர்கள் வழிதவறி செல்கின்றனர் என்றும் சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் கட்சி 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

8 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

9 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

9 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

10 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

12 hours ago