கட்சி விரோத செயலில் ஈடுபட்டால் நிர்வாகிகளை நீக்கத்தான் செய்வோம் – முதல்வர் பழனிசாமி பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுகவின் ஒற்றுமையை குறித்து திட்டமிட்டு தவறான பரப்புரையை செய்கிறார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமாவுடன் கூட்டணியில் இழுபறி ஏதுமில்லை. எல்லா கட்சிகளிலும் தொகுதி பங்கீடு குறித்து  பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும். இடஒதுக்கீடு விஷயத்தில் எந்த சூழலில் எதை செய்ய வேண்டுமோ அதை அரசு செய்யும் என கூறியுள்ளார். சென்ற இடமெல்லாம் மக்களிடையே எழுச்சியை காண முடிகிறது. அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் வரும் தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.

அம்மாவின் ஆட்சி தொடரும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார். நிதிநிலையை பொருத்து அரசு ஊழியர்களுக்கு தேவையானவற்றை அரசு செய்யும். கொரோனா காரணமாக மற்ற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் நடந்தாலும் தமிழகத்தில் செய்யவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. அதிமுக வேறு, அமமுக வேறு, தினகரன் தொடர்ந்து மூக்கை நுழைத்து பார்க்கிறார். ஆனால், அவர் நினைப்பது ஏதும் நிச்சயம் நடக்காது.

அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய விருப்பப்பட்டால் அதனை தலைமை முடிவு செய்யும் என முதல்வர் தெரிவித்துள்ளார். தினகரன் குறித்து தான் அதிகம் பேசுறீங்க, சசிகலா பற்றி ஏதும் பேசமாற்றிங்க என்ற கேள்விக்கு, கட்சியில் இல்லாதவரை பற்றி நாங்கள் ஏன் பேச வேண்டும் என கூறியுள்ளார். தினகரன் தான் தலையிட்டு 18 எம்எல்க்களை பிரித்து, அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று செயல்பட்டார். ஆனால், கட்சியை உடைக்கவும், கலைக்கவும் முடியவில்லை. பின்னர் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். அதனால் தான் அவரை பேசிக்கொண்டு இருக்கிறோம் என பதில் கூறியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் யாரும் அடக்குமுறையில் ஈடுபடவில்லை. அதிமுகவில் கட்சி விரோத செயலில் ஈடுபட்டால் நிர்வாகிகளை நீக்கத்தான் செய்வோம். கட்சிக்குள் இருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டி அண்ணன், தம்பி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார் என வேலுமணி பேசியதற்கு முதல்வர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய முதல்வரிடம், திமுகதான் பொது எதிரி அவர்களை சேர்ந்துதான் முறியடிக்க வேண்டும் என சசிகலா கூறியுள்ளார் என்று கேள்விக்கு, அது அவருடைய கருத்து, இதற்கு நாங்கள் எப்படி சொல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் வழக்குகளை விசாரிக்க ஏற்கனவே தனி நீதிமன்றங்களை அமைத்துள்ளது. ஸ்டாலின் அறியாமையால் பேசுகிறார். எங்கள் கட்சியை பற்றி துரைமுருகன் கவலைப்பட அவசியமில்லை. அவர் கட்சியை முதலில் பார்க்க சொல்லுங்கள். அதிமுகவின் ஒற்றுமையை குறித்து திட்டமிட்டு தவறான பரப்புரையை செய்கிறார்கள். நாங்கள் ஒரே கருத்துடன் ஒற்றுமையாக இருக்கிறோம் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

1 hour ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

2 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

2 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

3 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

3 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

4 hours ago