ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும்.
திருச்சி மாவட்டம் நீதிமன்றம் அருகே ஹீபர் ரோட்டில், கேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதியதாக ஒரு பேக்கரி திறக்கப்பட்டுள்ளது. இங்கு விற்கப்படும் கேக்குகள் 600 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பலவிதமான கேக்குகள் விற்பனைக்கு உள்ளது.
இந்நிலையில் ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என பேக்கரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு பெட்ரோலுக்கான கூப்பனை பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்திற்கு சென்று, அந்த கூப்பனை கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோலை பெற்றுக்கொள்ளலாம்.
இச்சலுகை குறித்து பேக்கரி உரிமையாளர் சகாயராஜ் அவர்கள் கூறுகையில், இந்த சலுகை அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு கிலோ கேக் வாங்கினால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மற்ற இலவசங்களை வழங்கினால் அவர்களுக்கு பெரிய அளவில் பயன் இருக்காது என்றும், பெட்ரோல் விலை தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான இது ஒரு சூசகமான வழி என்றும், இந்த சலுகை ஒரு மாதம் வரை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…