கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக மாநகராட்சிக்கு விடுதி ஒன்றை வழங்குவதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகள் கூடுதலாக தேவைப்படும் நேரத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) சென்னை ஐஐடி நிறுவனத்தினிடம் கேட்டதன் அடிப்படியில், தற்போது நிறுவனத்தில் உள்ள விடுதி ஒன்றை அளிப்பதாக ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஐஐடி நிறுவனத்தில் உள்ளே இருக்கும் சபர்மத் மகாநதி விடுதியை கொரோனா வார்டாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதனிடையே அந்த விடுதியில் தங்கியிருந்த மாணவர்களின் பொருட்களை பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்து, கடந்த 24 மணிநேரத்தில் சுத்தம் செய்த பிறகு, தற்போது அந்த விடுதியை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வார்டுகள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் வெளி நபர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் செய்யப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…