நாய்கள் இறக்குமதிக்கு தடையில்லை.. மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

வர்த்தக பயன்பாட்டிற்காக நாய்கள் இறக்குமதி செய்ய தடை விதித்த அறிவிப்பாணையை ரத்து செய்தது ஐகோர்ட்.

வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை என்று தெரிவித்து, மத்திய அரசு வெளியிட்ட தடை அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்கு நாய்களை இறக்குமதி செய்ய 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்னிய வர்த்தகத்துறை தலைமை இயக்குனர் தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பாணையை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், மெட்ரால் கன்னி கிளப் மற்றும் பாலகிருஷ்ணபட் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உரிய ஆய்வு நடத்தாமல் வெளிநாடுகளில் இருந்து நாய்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மனுதாரர்கள் மனுவில் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, இறக்குமதி செய்யப்படும் நாய்களால் உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறுவதில் நியாயமில்லை என்றும் வர்த்தக ரீதியில் நாய்கள் இறக்குமதி செய்வதை மத்திய அரசு முறைப்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

1 hour ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

3 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

3 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

4 hours ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

4 hours ago