மதுரை-போடி இடையே 10 ஆண்டுகளுக்கு முன் மீட்டர்கேஜ் பாதையில் ரயில் இயங்கி வந்தது.பின்னர் அதை அகலப்பாதையாக மாற்ற திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மதுரை-போடி ரயில் பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டனர். பின்னர் தண்டவாளம் அகற்றப்பட்டு மீட்டர்கேஜ் பாதையை அகலபாதை அமைக்கும் பணி தொடங்கியது.
வருட வருடம் திட்டத்திற்கான மதிப்பீடு அதிகரித்து கொண்ட சென்றதால் மதுரை இருந்து போடி இடையே 90 கி.மீ. தூர ரயில் பாதை அமைக்க ரூ.300 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இந்த 90 கி.மீ. தூர ரயில் பாதையில் 8 பெரிய பாலங்கள் ,190 சிறிய பாலங்கள் அடங்கும். கடந்த 2018-ம் ஆண்டு பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.80 கோடி மட்டுமே நீதி ஒதுக்கப்பட்டது.
இந்த நீதியை கொண்டு மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கி.மீட்டருக்கு பணிகள் முடித்தன. அதில் 2 பெரிய பாலங்கள், 70 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் உசிலம்பட்டியில் இருந்து முதல் போடி வரை 53 கி.மீ. தூரம் பணிகள் முடிக்க வேண்டி உள்ளது.
இதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமே..?என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்து உள்ளது. இந்நிலையில் மீதம் உள்ள பணியை முடிக்க வருகின்ற பிப்ரவரி மாதம் தாக்கலாகும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணியை முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…