இரவு நேரங்களில் மின் பயன்பாடு அதிகரிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil balaji

தமிழகத்தில் மின் தடை தான் ஏற்படுகிறது, மின்வெட்டு கிடையாது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. 

மின்சாரத்துறை ஆமிச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் மின் தேவை கடந்த 2 ஆண்டுகளில் மிக அதிகமாகியுள்ளது; 2020 – 21 இல் மின் நுகர்வு 16,481 மெகாவாட்; ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் 19,387 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இரவு நேரங்களில் 8 முதல் 12 மணி வரை மின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் மின் தடை தான் ஏற்படுகிறது, மின்வெட்டு கிடையாது .தமிழகத்தில் கோடைகாலத்தில் 19,387 மெகாவாட் மின் தேவை உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையின் மின்தேவை அதிகமாக உயர்ந்துள்ளது, தற்போது 4,016 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது; எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது; மின்தடை என்பது பராமரிப்புப் பணிகளுக்காக செய்யப்படுவது. தேவைக்கு அதிகமாக மின் விநியோகம் செய்ய மின்சார வாரியம் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்