உயர்த்தப்பட்ட பெட்ரோல்,டீசலின் வரி ! இதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு ?

Published by
Venu

பெட்ரோல், டீசல் வாட் வரி உயர்வால் எவ்வளவு கூடுதல் வருவாய் கிடைக்கும் அரசு விளக்கம் அளித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருவதால் கச்சா எண்ணையின் விலை கடுமையாக குறைந்து உள்ளது.எனேவ இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது.

ஆனால் ஒரு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.இதற்கு இடையில் தான் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி தற்போது பெட்ரோல் விலை ரூ.75.54 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டீசல் விலை ரூ.68.22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு இடையில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அதாவது பெட்ரோல் மற்றும் டீசலின் வரி மாற்றியமைக்கப்பட்டதன் மூலமாக மாநில அரசிற்கு ரூ.25,000 கோடி முதல் ரூ.30,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தவறான செய்திகள் வெளியாகியது.எனவே   பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தியதால் மாநில அரசுக்கு நடப்பாண்டில் ரூ.2500 கோடி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறையும் போது மாநிலத்தின் வருவாய்க்கு ஏற்பாடும் பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்படும்.அதேபோல் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது ,நுகர்வோர் மீது வரிவிதிப்பின் மூலம் ஏற்படும் கூடுதல் சுமையும் குறையும் என்று தெரிவித்துள்ளது.  

 

 

 

Published by
Venu

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

12 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

12 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

13 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

13 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

15 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

16 hours ago