செங்கல்பட்டு HLL நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி குறித்து பேச இன்று டெல்லி செல்கிறார் தொழில்துறை அமைச்சர்!

Published by
Rebekal

செங்கல்பட்ட்டில் உள்ள மத்திய அரசின் HLL நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தி  தொடங்குவது குறித்து மத்திய அரசிடம் பேசுவதற்காக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று டெல்லி செல்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அது போல தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவின் தீவிரத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே கொரோனாவை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான தீர்வு என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருவதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,மத்திய அரசின் HLL பயோடெக் தடுப்பூசி நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையம் செங்கல்பட்டில் அமைந்துள்ளது. ஆனால் இந்த நிறுவனம் கட்டப்பட்டது முதல் இதுவரை தடுப்பூசி உற்பத்தி தொடங்கப்பட்டமால் உள்ளது. எனவே, இது குறித்து மத்திய அரசிடம் நேரில் பேசுவதற்காக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று டெல்லி செல்கிறார்.

ஏற்கனவே நேற்று முன்தினம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரடியாக தடுப்பூசி நிறுவனத்திற்கு சென்று ஆய்வு நடத்திய நிலையில், உரிய நிதி ஒதுக்கி தடுப்பூசி உற்பத்தி பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து தற்போது இந்த செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் நேரடியாக சந்தித்து பேசுவதற்காக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொழில் துறை செயலாளர் மற்றும் சில அதிகாரிகளும் இன்று டெல்லி செல்கின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

6 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

7 hours ago