பொது போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தும் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக்த்தில் குறிப்பிட்ட 8 நிறுவனங்கள் தயாரிக்கும் ஜிபிஎஸ் கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னையில் உள்ள ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில் ஏத்தனையோ ஜிபிஎஸ் நிறுவனங்கள் இருந்தும், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஹரியானாவை சேர்ந்த அந்த குறிப்பிட்ட 8 நிறுவனங்களின் கருவியை மட்டும்தான் பொறுத்தவேண்டும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது மட்டும்தான் பொருத்தவேண்டும் என்பது சட்ட விரோதமானது இதனால் அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கு குறித்து விளக்கமளித்த தமிழக அரசு, கால அவகாசம் கேட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 18-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு, 8 நிறுவனங்களின் கருவிகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…