நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பின் ராவத்தின் வீரத்தை போற்றும் வண்ணம் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சைன் இந்தியாவின் சோல்ஜர் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் 120 கிலோ எடை கொண்ட பிபின் ராவதின் மார்பளவு சிலையை தயாரித்து அதை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு.
கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 12 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இவர்களது மரணம் நாட்டையே உலுக்கிய நிலையில், குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அன்ஜலி செலுத்தினர்.
இந்நிலையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பின் ராவத்தின் வீரத்தை போற்றும் வண்ணம் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சைன் இந்தியாவின் சோல்ஜர் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் 120 கிலோ எடை கொண்ட பிபின் ராவதின் மார்பளவு சிலையை தயாரித்து அதை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வீதியில் உள்ள சிற்ப கூடத்தில் ஐம்பொன்னாலான சிலை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் முதல் கட்டமாக அவரது உருவம் தத்ரூபமாக களிமண்ணால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று, பின்,டெல்லி இந்தியா கேட் போர் நினைவுச் சின்னம் அருகில் பிரதமர் மோடியிடம் இந்த சிலையை அளிக்க உள்ளதாகவும் முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…