Ration shop [file image]
சென்னை : தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரியாக தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியவில்லை. இதனால், விரல் ரேகை மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக, கருவிழி பதிவு மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 90% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து கடைகளிலும் கொண்டுவரப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேலாக புதிய கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புதிய ரேஷன் கார்டு கேட்டு 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்து நீண்ட நாள்களாக காத்திருப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…