10 ஆண்டுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்தும் வெத்து வெட்டு என்றும் வீண் விளம்பரம் எனவும் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நூற்றுக்கணக்கில் ஒப்பந்தங்கள், கோடிகளில் முதலீடுகள் என பொய் பேசும் முதல்வர் பழனிசாமி முகமூடியை கழற்றி வீசியிருக்கிறது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் பெற்ற முதலீடுகள் ஆண்டுக்கு ரூ,1,800 கோடி என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது என கூறியுள்ளார்.
வெத்து வேட்டுகளின் சாயம் வெளுக்கிறது என்றும் அறிவிக்கப்பட்ட முதலீடான ரூ.1.90 லட்சம் கோடியில் பெற்றது வெறும் 9.4% மட்டும்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். முதலீடுகள் பற்றி முதல்வர் பழனிசாமி கூறிய பொய்யின் சாயம் வெளித்துவிட்டது என விமர்சித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தில் முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…