தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக்கொள்ள கே.எஸ்.அழகிரி தயாரா என பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பினார்.
தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக தலைமை அலுவலகமான கமலாயம் செயல்படும் இடம் மக்கள் வசிக்கும் பகுதி. அங்கு கட்சி அலுவலகம் அமைத்ததால் மக்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது எனவும், 30 கோடிரூபாய் மதிப்புள்ள அந்த கமலாலயம் கட்டிடத்தை திரு முக்தா சீனிவாசன் அவர்களை எப்படி மிரட்டி வெறும் ரூ. 3 கோடிக்கு வாங்கினார்கள் எனவும்,
அனைத்து மாவட்டத்திலும் பாஜகவிற்கு அலுவலகம் கட்ட இடம் வாங்கியதாகவும், அதற்கான பணத்தை எங்கு வசூல் செய்தீர்கள்..? அதற்கான அத்தாச்சி உங்களிடம் உள்ளதாக என தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் முருகன், தமிழக பாஜக தலைமை அலுவலகம் செயல்படும் இடத்தை ரூ.30 கோடி மதிப்புள்ளதென்றும் அதை ரூ.3 கோடிக்கு மிரட்டி வாங்கினார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய விலையையும், இப்போது இருக்கிற சந்தை மதிப்பையும் ஒன்றுபடுத்தி பேசியிருப்பது அவர் எத்தகைய குழப்பத்தில் இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அவர் குறிப்பிட்டுள்ள படியே ரூ.30 கோடிக்கு நாங்கள் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். அவர் வாங்கிக் கொள்ள தயாரா..? என தெரிவித்துள்ளார்
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…