நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதிக்கப்பட்டது.
தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இன்று தமிழக அரசு வலியுறுத்தியது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலையை கரைக்க அனுமதி கோரி கணபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழிபாட்டுக்கு பின் விநாயகர் சிலைகளை மக்கள் பெரிய கோவில் அருகில் வைக்க அனுமதி வழங்கலாமா..? மக்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் சிலை வைக்க அனுமதி கொடுக்கப்படுமா..? ஆனால், கொரோனா சூழலில் மிகப்பெரிய ஊர்வலங்கள் அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என நீதிபதிகள் கூறினர்.
மேலும், கொரோனா விதிகளை பின்பற்றி ஐந்து அல்லது ஆறு நபர்கள் சிலையை கொண்டு செல்ல அனுமதி உள்ளதா..? மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தியில் தளர்வுகள்அளிக்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நாளை காலை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…