இதுதான் சமூக நீதியா..? இங்கேயே சமூக நீதியை பாதுகாக்க முடியவில்லை – எடப்பாடி பழனிசாமி

Published by
murugan

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி  வன்னியர்களுக்குக்கான 10.5% உள்இட ஒதுக்கீடு ரத்துக்கு திமுகவே காரணம்.  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதடவில்லை. அதேபோல இந்த வழக்கில் முழு தரவுகளை(விவரங்கள்) அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை.

அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக அரசு செயல்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டது ஒரு கண்துடைப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்த அரசு அதிகாரியை ஒரு அமைச்சர் ஜாதி சொல்லி திட்டுகிறார். அந்த அதிகாரி மனமுடைந்து ஊடகங்கள் மூலமாக தனது மன அழுத்தத்தை தெரிவிக்கிறார். அவரை பதவியிலிருந்து நீக்காமல் வேறு துறைக்கு முதல்வர் மாற்றியிருக்கிறார்.

எப்போது பார்த்தாலும் சமுகநீதிக்கு பாடுபடுவதாக முதல்வர் கூறுகிறார். இதுதான் சமூக நீதியா..? இங்கேயே சமூக நீதியை பாதுகாக்க முடியவில்லை. இவர் இந்தியா முழுவதும் சமூக நீதியை பாதுகாக்க போகிறாராம். தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது.

 

 

Published by
murugan

Recent Posts

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

3 minutes ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

21 minutes ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

1 hour ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

2 hours ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

4 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

4 hours ago