பேரறிவாளனுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க இதுதான் காரணமா?

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு தமிழரின் விடுதலை தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் குரல் எழுப்பி வந்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். தற்போது உடல்நலக்குறைவால் பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு டெல்லி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பேரறிவாளன் பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமீன் வழங்க கோரி அவரது தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர்களுக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்றது.

இதன்பின்னர் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது. பேரறிவாளன் 32 ஆண்டுகளாய் சிறையில் இருக்கிறார் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தவர், சிறையில் நல்லபடியாக நடந்து கொண்டுள்ளார். பரோலில் வந்த போதும் நடத்தை சரியாக உள்ளது. மருத்துவத் தேவை இருக்கிறது மற்றும் சிறையில் படிப்பைத் தொடர்ந்துள்ளார் என பேரறிவாளனுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க இதுதான் காரணமான விஷயங்கள் என கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

23 minutes ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

3 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

4 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

4 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

7 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

7 hours ago