உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்ர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார்.கடந்த சில மாதங்களாக அவரது அரசியல் செயல்பாடு அதிகமாகவே இருந்து வந்தது.
இதனையடுத்து திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.37 ஆண்டுகாலமாக மு.க.ஸ்டாலின் வகித்த பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.பின்னர் இளைஞரணியில் தீவிரமாக களமிறங்கி வேலை செய்து வருகிறார்.உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியும் வருகிறார்.
இந்த வேளையில் தான் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அடுத்த மாதம் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.மேலும் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்தது. இதனால் தமிழகத்தின் பிரதான கட்சிகள் போட்டியிட விரும்புவோரை விருப்பமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.அந்த வகையில் தான் திமுகவில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட திமுக எம்பி கவுதம சிகாமணி விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம சிகாமணி தனது சொந்த செலவில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…