திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஜெயக்குமார் குற்றசாட்டு.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் பெரும்பாலானவை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழ்நாடு அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இமேஜை அளிக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருவதாகவும், காலச்சக்கரம் சுழலும் திமுக பதில் சொல்ல வேண்டிய நிலை வரும் என்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவது சந்தேகமே என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…
சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…
டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…