தேமுதிக விலகியது வருத்தமளிக்கிறது – பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி.!

Default Image

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்திருப்பது வருத்தமளிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியிருக்கிறது. பிரதான கட்சியான அதிமுக – திமுக தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரப்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மறுபக்கம் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

அந்தவகையில் அதிமுக – தேமுதிக இடையே நான்கு கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுலபமான முடிவு எட்டப்படவில்லை. ஆனாலும், விரைவில் இதற்கான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட, சூழலில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன், தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட நாட்கள் இருந்தார்கள். இன்று கூட்டணியில் இருந்து வெளியேறியது வருத்தமளிக்கிறது. ஆனாலும், தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் உள்ளது, விலக்கிக்கொள்வதற்கும் நேரம் இருக்கிறது.

ஆகையால், தேமுதிக மறுபரிசீலனை செய்ய வேண்டும், அதேபோல் அதிமுகவும் அவர்களை இணைப்பதற்கு எதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் நல்ல இருக்கும் என்று நினைகிறேன் என கூறியுள்ளார். இதனால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நம்பிக்கை இருப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 06042025
War Mock Drill in India
BJP Lady Person murder in Pattukottai Tanjore district
MIGM Exp successfully tested by NAVY and DRDO
Vadakadu Riot - Pudukottai Police
SRHvDC - IPL2025
Hyderabad vs Delhi