அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது மிக மிக முக்கியம்! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.  அதன்படி, அமலாக்கத்துறை தரப்பு வாதத்தில், ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக கொடுக்கப்பட்டன. செந்தில் பாலாஜி தங்களை இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த விடாமல் தடுத்தார்.

வாக்குமூலம் பெற முயற்சித்த போது அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் தான் அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பார் என்ற சந்தேகத்திற்கு வலுவான காரணங்கள் இருந்ததால் தான் கைது செய்தோம். நாங்கள் கைது செய்து வைத்துள்ள ஒருவர் காவலில் இருந்து தப்பித்து தலைமறைவாகி விட்டு 15 நாட்கள் கழித்து வந்து உங்களுக்கு வழங்கப்பட்ட 15 நாட்கள் முடிந்து விட்டது.

எனவே, இனி காவலில் எடுத்து விசாரிக்க கூடாதென சொல்ல முடியுமா? அதே போல் தான் செந்தில்பாலாஜி விவகாரத்தை கருத வேண்டும். இதனால், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தது மற்றும் தற்பொழுது நீதிமன்ற காவலில் இருப்பது ஆகியவற்றை விசாரணை காலமாக கருதக் கூடாது. அப்படி கருதினால் செந்தில் பாலாஜி சட்டத்தை உடைக்க நாம் அனுமதிக்கிறோம் என்று பொருளாகின்றது என அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உடனடியாக அனுமதிக்க வேண்டும். விசாரணை நபரை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே நீதிமன்ற காவல். மருத்துவமனையிலோ, சிறையிலோ சென்று விசாரிப்பது நீதிமன்ற காவலாக இருக்காது என கூறி தனது தரப்பு வாதங்களை முடித்து கொண்டது அமலாக்கத்துறை. இதையடுத்து செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது மிக மிக அவசியம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

எனவே, அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை நிறைவு செய்ததை அடுத்து, அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜி, மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை..? எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன்…

12 minutes ago

உடல் தகுதி இல்லை என்றால் விளையாடவே வேண்டாம்..பும்ரா குறித்து கடுப்பான திலீப் வெங்சர்க்கர்!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…

2 hours ago

காசாவில் தினமும் 28 குழந்தைகள் கொலை…யுனிசெஃப் கவலை!

காசா :  கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…

3 hours ago

உடல் நலக்குறைவால் இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!

சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…

3 hours ago

நெல்லை : 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!

நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…

4 hours ago

கூகுள் ஃபைண்ட் ஹப் : சிம் எடுத்தாலும் இனிமே போனை கண்டுபிடிக்கலாம்..அசத்தல் அப்டேட்!

கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…

4 hours ago