இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் அலட்சியம் காட்டுவது தவறு – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

Published by
Rebekal

காவலர்கள் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போடாமல் அலட்சியம் காட்டுவது தவறு என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதிலும் கொரோனாவை தவிர்க்கும் விதமாக முன்கள பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் முதல்கட்டமாக முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் அலட்சியம் காட்டும் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் சென்னை பெருநகர காவல்துறையில், கொரோனா பெருந்தொற்றை சவால்களுடன் எதிர்கொண்டு பணியாற்றக்கூடிய காவல்துறையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், சமீபகால புள்ளிவிபரங்களின்படி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட காவலர்களுக்கு தொற்று பாதிப்பு மிகக் குறைவாகவும், உயிர் இழப்பு ஏற்படாமல் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே, முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் எனவும், இது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றும் எனவும் கூறியுள்ளார். மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அலட்சியமாகவும், கவனக் குறைவாகவும் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், அது தவறு எனவும் கூறியுள்ளார்.

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது என காரணம் கூறாமல் தாமாகவே முன் வந்து கோவிட் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் கு.ஜெகதீசன் 9444488909 மற்றும் துணை ஆணையாளர், ஆயுதப்படை, அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் தனசேகரன் 9498133763 ஆகியோரை தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”…எடப்பாடி பழனிசாமி கருத்து!

“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”…எடப்பாடி பழனிசாமி கருத்து!

மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…

16 minutes ago

விராட், ரோஹித் இல்லாமையே கெத்து காட்டும் இந்தியா! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் கில்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…

52 minutes ago

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…

1 hour ago

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்…சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…

1 hour ago

”மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” – பிரதமர் மோடி.!

ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…

2 hours ago

பழிக்கு பழி.., இஸ்ரேல் விஞ்ஞானிகளுக்கு குறி வைத்த ஈரான் ஏவுகணைகள்.!

ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…

2 hours ago