அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தடியடி…..!!!

Published by
kavitha
  • ஜல்லிக்கட்டு போட்டியானது எதிர்பார்த்தப்படி துவங்கி காளைகள் சீறிபாய்ந்து வருகிறது.
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளர்கள் மீது இலேசான தடியடி நடத்தப்பட்டுள்ளது

தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது.

இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் வாடிவாசல் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியினை கண்டுகளிக்கும் விதமாகவும் பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.வாடிவாசலில்  சீறிப்பாய  700 காளைகள் திமிளை காட்டிவாறு நிற்கின்றன இந்த காளைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், தேனி, கம்பம் மற்றும் திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் இருந்து வருகின்ற  காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் அவர்களின் தலைமையிலான குழுவானது இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு போட்டி வீறுவிருப்பாக நடைபெற்று கொண்டிருக்க ஜல்லிக்கட்டு மாடுகளை அனுப்பும் டோக்ககன்களின்  குளறுபடியால்   மாட்டின் உரிமையாளர்களுக்குள் சலசலப்பு ஏற்படவே இதனைக் கட்டுப்படுத்த போலீசார் அவர்களின் மீது லேசான தடியடி நடத்தினர். இதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்த நிலையில் சீறிப்பாயும் காளைகலை அடக்கும் இளங்காளைக்களுக்கு  அண்டா மற்றும் குக்கர் என்று  விதவிதமான வகைகளில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகொன்றன.

Recent Posts

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

2 hours ago

ஜூன் 10-ல் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

3 hours ago

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…

3 hours ago

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

4 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

4 hours ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

7 hours ago