ஜல்லிக்கட்டு போட்டிகள்… 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் பதிவு – அமைச்சர் மூர்த்தி

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரபலமானது. இதனை கண்டு ரசிக்க ஒரு கூட்டமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டது.

சபரிமலை பக்தர்கள் கூட்டத்தை கேரள அரசு மிகச்சிறப்பாக கையாண்டு வருகிறது.! அமைச்சர் சேகர்பாபு.!

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், ஆகியவற்றில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ள மாடுபிடி வீரர்கள், காளைகள் முன்பதிவு செய்ய madurai.nic.in என்ற இணையதளத்தில் இன்று வரை முன்பதிவு செய்யலாம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மூர்த்தி, மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,176 காளைகள் மற்றும் 4,514 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதில், அலங்காநல்லூர் 6,099, பாலமேடு 3,677, அவனியாபுரம் 2,400 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதுபோன்று, அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,318 மாடுபிடி வீரர்களும், பாலமேட்டில் 1,412, அவனியாபுரத்தில் 1,734 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், அலங்காநல்லூரில் அரங்கம் திறக்கப்பட்ட பின் 5 நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

33 minutes ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

1 hour ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

2 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

3 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

4 hours ago