மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவிடத்தில் டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக கட்சியை சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அப்பொழுது அம்மா காட்டிய பாதையில் மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தோடு தொடர்ந்து பயணிக்க உறுதி ஏற்கிறோம் என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தலைமையில் அங்கிருந்து அமமுக கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…