40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகைகள் தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் விளக்கம்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 2-ம் பிரகாரத்திலுள்ள, கருவூலத்தில் விலைமதிப்புமிக்க தங்கம், வெள்ளி, வைடூரியம், பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்களை திருவிழா நாட்களில் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நகை மதிப்பீட்டாளர்கள், ஆய்வு மேற்கொண்டதில், நகைகளின் எடை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஓய்வுபெற்ற, தற்போதைய குருக்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 30 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கோவில் இணை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகையில் தேய்மானம் ஏற்பட்டு, நகையின் எடை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் அனைத்து இனங்களும் சரியாக உள்ளன என்றும், இந்த விவகாரத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், கோவில் நகைகளின் பாதுகாப்பு குறித்து, பக்தர்களோ, பொதுமக்களோ அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தங்கம், வெள்ளி பொருட்களில் தேய்மானம் காரணமாக ரூ.14,43,254 இழப்பு என நகை மதிப்பீட்டாளர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…