தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக இருந்த டி.கே ராஜேந்திரன் பதவிக்காலம் இன்றுடன் முடிந்ததை அடுத்து தமிழகத்தின் 29 வது டிஜிபி யாக ஜே.கே திரிபாதி அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிபாரதி அவர்கள், 1985 ம் ஆண்டு ஐபிஸ் பிரிவில் தேர்ச்சி அடைந்தவர். காவல்துறையின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு வந்த திரிபாரதி அவர்கள் தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், சென்னை மாநகரத்தின் ஆணையராக தொடர்ந்து இரண்டு முறையும் , தென் மண்டல ஐஜி , சிறைத்துறை ஐஜி என்று காவல்துறையின் செயல்பட்டு வந்தவர். சிறைத்துறை தலைவராக இருந்த போது கைதிகளுக்கு சமூக அந்தஸ்து பெற்று தர உறுதியுடன் செயல்பட்டவர் திரிப்பாதி.
காவல் துறையில் தொடர்ந்து செயல்பட்டு வந்த எனக்கு இந்த பொறுப்பு வழங்கியதற்கு மிக்க நன்றி என்று திரிபாதி அவர்கள் கூறியுள்ளார். முன்னதாக முன்னாள் டிஜிபி தனது ஆவணங்கள் அனைத்தையும் டிஜிபி திரிபாதி அவர்களிடம் ஒப்படைத்தார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…