கே.எஸ். அழகிரி பேச்சு அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் உள்ளது – அண்ணாமலை

Published by
பாலா கலியமூர்த்தி

கே.எஸ் அழகிரிக்கு, ஏதொரு விஷயத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பேசிகொண்டியிருக்கிறார் என அண்ணாமலை விமர்சனம்.

தமிழகத்திற்கு முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவியை புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரை ஆளுநராக நியமிப்பது தான் சிறந்த மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றுக்கு முற்றிலும் புறம்பாக பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காகவே பொறுப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்ட ஆர்.என்.ரவியை நியமித்துள்ளனர்.

இத்தகைய பின்னணி கொண்ட ஆர்.என்.ரவியை, புதிய ஆளுநராக தமிழகத்தில் நியமித்து ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், அதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய சூழல் உருவாகும் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் பல இடத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக துணை ராணுவ தளபதி நியமிக்கப்பட்டார் என கூறினார்.

இதுபோன்று பல துறைகளில் சாதனை புரிந்தவர்கள் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆளுநராக வருவதற்கு ஐபிஎஸ் அதிகாரிக்கு தகுதி இல்லை என்று சொல்லுகிறார்கள். பீகார் முதல்வர் ஐஏஎஸ் அதிகாரியாகவும், கிரண்பேடி ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்தவர். உத்தராகண்ட், நாகலாந்து, அருணாச்சல பிரதேசத்தில் முன்னதாக பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக இருந்தார்கள்.

அவர்கள் சென்ற இடத்தில் எல்லாம் சிறப்பு தான் செய்திருக்கிறார்கள் தவிர, எந்த தவறான விஷயத்தையும் செய்யவில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று கிராமத்தில் சொல்லுவார்கள். அதுபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரிக்கு, ஏதொரு விஷயத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பேசிகொண்டியிருக்கிறார் என விமர்சித்தார்.

மேலும், என்.ஆர் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டத்திற்கு முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், கேஎஸ் அழகிரி மட்டும் எதற்காக காழ்ப்புணர்ச்சி அரசியலை ஆளுநரை வைத்து செய்து கொண்டியிருக்கிறார் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago