டிருவெற்றியூர் அருகே, மணலி மண்டலம் பாடசாலை தெருவில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 800 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் போதுமான வகுப்பறைகள் இல்லை. இதனால் இட நெருக்கடியில் படிக்க வேண்டிய அவலநிலையில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு உள்ளது. ஏற்கனவே உள்ள வகுப்பறைகளும் பழுதடைந்து உள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் கசிந்து வகுப்பறைக்குள் விழுவதால் மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமியிடம் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தரக் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று அவர், இரண்டு தளங்கள் கொண்ட வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடம் அமைத்துத்தர தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.50 கோடியை ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் அந்த ஆரம்ப பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட உள்ள இடங்களை கலாநிதி வீராசாமி எம்.பி. நேற்று ஆய்வு செய்தார். அப்போது 6 மாதத்திற்குள் இந்த கட்டுமான பணி முடிவடைந்து மாணவ-மாணவிகளின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த கட்டிடம் மாணவர்களின் கற்றலுக்கு மேலும் ஒரு தூண்டு விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…