நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தை குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி NCL 2-ம் அனல் மின் நிலையத்தில் நேற்றைய தினம் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனையடுத்து NCL நிறுவனத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களும், கிராம மக்களும் நிவாரண நிதி கேட்டு முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் தங்களது கருத்துக்களையும், இரங்கல்களையும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பாக கூறியதாவது, கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம். விபத்துகளில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம். இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…