kanimozhi [File Image]
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி, 14 நாள் நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் நோக்கி இஸ்ரோ ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி.- சி57 ராக்கெட் மூலம் “ஆதித்யா எல்-1” விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு தற்போது புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணிபுரிந்துள்ளார். அதன்படி, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக தென்காசியை சேர்ந்த நிகர்ஷாஜி பணியாற்றியுள்ளார். தற்போது சூரியனை நோக்கிய பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாகத் தொடங்கிய நிலையில், நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், “சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த திருமிகு. நிகர் ஷாஜி அவர்களுக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…