இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். இன்று மக்கள் தங்களது வீட்டு வாசலில், வண்ண கோலமிட்டு, களிமண், அகல்விளக்குகளை வாங்கி எண்ணெய் விட்டு, திரி வைத்து விளக்கேற்றி வைப்பர்.
திருவண்ணாமலையின் அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது, இன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை நேற்று மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அடுத்ததாக 2,668 அடி உயர மலை மீது நாளை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனால், தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய்யும், துணிகளும் தயார் நிலையில் உள்ளது.
இதற்கிடையில், கொரோனா காரணமாக தீபத்திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 நாட்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…